உங்களின் கருத்துக்களை உள்வாங்கி, அதன் அடிப்படையில் புதிய வடிவமைப்புக் கொண்டு விரைவில் உங்களின் வரவேற்பறையில் வலம் வருவோம்... மாணவர்கள் தயாரித்து அளிக்கும் ஆவணப்படங்கள் வெகு விரைவில்... செய்திதாள்கள் கூட வராத எங்கள் ஊர் தற்போது எவ்வாறு உள்ளது..?.....விரைவில்...!! 10 மற்றும் 12-ஆம் வகுப்பு ரிசல்ட் இனி நமது தளத்திலும் காணலாம்... அனைத்து வகுப்பு பாட புத்தகங்களையும் இங்கே தரவிரக்கம் செய்யுங்கள்...

புதன், 10 ஜூலை, 2013

சமுதாய தலைப்பில் ஆவணப்படங்கள்...!!!

எங்கள் பள்ளியில் சமூகப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கருத்துப் படங்கள் தய்யரிக்கப்பட்டு வருகின்றன...!!!
அவற்றின் தலைப்புகள்:-

1. குழந்தைத் திருமணம்
2. குழந்தைப் போராளிகள்
3. குழந்தைத் தொழிலாளர்கள்

அப்படங்கள் இத்தளத்தில் இம்மாதம் 19-ஆம் தேதி மாலை வெளியிடப்படும்..!!!
                                     --மு.மீனா&ரா.நவீன் - எட்டாம் வகுப்பு.

கனவு ஆசிரியர் :அறிவியல் மேதைகளை உருவாக்கும் நாகேந்திரன்!-விகடனில் இருந்து...

கணக்கு பிணக்கு என்று கசப்பவர்கள் மத்தியில், கணக்கைக் கற்கண்டாய்ச் சொல்லிக் கொடுப்பவர் இருந்தால் எப்படி இருக்கும்...
 
திருவள்ளூர் மாவட்டம், சீனிவாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியராக இருக்கும்  நாகேந்திரன்தான் அந்தக் கற்கண்டு ஆசிரியர். விளையாட்டு முறையில் கணக்கைச் சொல்லிக் கொடுக்கும் நாகேந்திரன், பயன்படுத்தப்பட்ட    பொருட்களைக்கொண்டே எளிய பரிசோதனைகள் செய்து அறிவியலைச் சொல்லித்தருகிறார்.
 
கோழி இறகைக்கொண்டு திசையைக் கண்டறிவது, டங்ஸ்டன் இழை இல்லாத ஜீரோ வாட்ஸ் பல்பை லென்ஸாகப் பயன்படுத்துவது என்று இவரின் செயல்முறைகள் வியப்பை அளிக்கின்றன.
 
மீன் இரண்டு எழுத்து, அதன் இதயத்திலுள்ள அறைகளும் இரண்டு. தவளைக்கு மூன்று இதய அறைகள், அதன் எழுத்துகளும் மூன்று. அதே போல், நான்கு எழுத்துகள்கொண்ட மனிதனுக்கு நான்கு இதய அறைகள் என்று இவரின் புதிய உத்தி முறையால், மாணவர்களைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் விடையைச் சரியாகச் சொல்கின்றனர்.
 
2011-ல் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாட்டில், இவருடைய கட்டுரை சிறந்த ஆய்வுக் கட்டுரையாகத் தேர்வானது. தமிழகத்திலிருந்து அழைக்கப்பட்ட 27 பேர்களில் இவரும் ஒருவர். தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், இரண்டு முறை செயல்திட்ட வழிகாட்டு நடுவராக இருந்துள்ளார்.
 
 
பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களைச் சந்தித்து, கல்வியின் தேவையை எடுத்துக்கூறி, மீண்டும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பச் செய்திருக்கிறார். பள்ளி செல்லாமல் இடை நிற்கும்  மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து, 'சமுதாயச் சிற்பிகள்’ என்ற குறும்படத்தை எடுத்திருக்கிறார்.
 
கணித மேதை ராமானுஜர் பிறந்தநாளான டிசம்பர் 22 அன்று ராமானுஜம் எண் 1729 என்பதைக் கொண்டு, 1729 ஸ்லைடுகளை உருவாக்கி, 'உலகிலேயே மிக நீண்ட பவர்பாயின்ட் ஸ்லைடு நிகழ்ச்சி’ (The World Longest Powerpoint Slide Show)என்ற உலக சாதனையைப் பதிவுசெய்தார். இவரின் கல்விச் சாதனைக்கு மாவட்ட நிர்வாகம், 'நல்லாசிரியர்’ விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. விடுமுறை நாட்களில்... விளையாட்டு முறையில் கணிதம் மற்றும் அறிவியல் பயிற்சி கொடுத்தும் தேர்வு நடத்தியும், 'சிறந்த அறிவியல் ஆர்வலர்’ என்ற விருதினை மாணவர்களுக்கு வழங்கிவருகிறார்.
 
 
'மாணவர்களைக் கேள்விகள் கேட்க ஊக்குவித்தால்தான், அவர்களின் அறிவு விரியும். இதன் மூலம் மட்டுமே கிராமத்து மாணவர்களும், ஐ.ஐ.டி., போன்ற தேர்வுகளில் எளிதில் சாதிக்க முடியும்' என்கிறார் நாகேந்திரன்.
 
இந்தப் பகுதியில் பிறந்தவர்தான் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன். அவர், ’என்னுடைய வெற்றிக்கு முக்கியக் காரணம், எனது ஆசிரியரே’ என்று சொல்லி இருக்கிறார். அந்த வரிசையில் அறிவியல் மேதைகளை உருவாக்கும் பணியில் இருக்கும் நாகேந்திரனும் ஒரு கனவு ஆசிரியரே.
 

திங்கள், 1 ஜூலை, 2013

மீண்டும் தொடங்கும் பயணம்...!!!

      இணைய இணைப்பு பெருவதில் ஏற்பட்ட பல்வேறு இடையூறு காரணமாக எங்கள் பள்ளியின் வலைப்பூ ஓராண்டுக்கு மேலாக முடங்கி கிடந்தது.. தற்போது அதில் கொஞ்சம் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக மீண்டும் இணையதளம் புதுப்பிக்கும் பணி இன்று முதல் துவங்குகிறது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்....!!!

 

கல்வி சுற்றுலா-2013

                  ஏப்ரல் 27-2013 அன்று எங்களது பள்ளியில் மாணவர்களை கல்வி சுற்றுலாவாக மாமல்லபுரம், சென்னைக்கு அழைத்து சென்றோம்... அதன் படங்கள் மற்றும் வீடீயோ தொகுப்பு இது.... நன்றியுடன் பகிருகிறோம்....
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய், 1 ஜனவரி, 2013

HAPPY NEW YEAR-2013


புதன், 25 ஜனவரி, 2012

வெற்றி நிச்சயம்- 4- திரு.சுகி சிவம் அவர்கள்

வெற்றி நிச்சயம் என்றத் தலைப்பில் திரு. சுகி சிவம் அவர்களின் பேச்சு தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சி இதோ..
                                                    வெற்றி நிச்சயம்-4

செவ்வாய், 24 ஜனவரி, 2012

வெற்றி நிச்சயம்-3 (திரு.சுகி சிவம் அவர்கள்)

வெற்றி நிச்சயம் என்ற தலைப்பில் திரு சுகி சிவம் அவர்களின் உரை இங்கே வெளியிடப்பட்டிருக்கிறது.
                                                           மூன்றாம் பாகம்

திங்கள், 16 ஜனவரி, 2012

வெள்ளி, 13 ஜனவரி, 2012

சுவாமி விவேகானந்தர் - தன்னம்பிக்கையின் ஊற்று..!!

12-01-2012 அன்று சுவாமி விவேகனந்தர் பிறந்த நாள் அன்று எங்கள் பள்ளி மாணவர்களால் படைக்கப்பட்ட விவேகனந்தரின் வாழ்க்கை வரலாறு... சிங்கப்பூர்ஒலி 96.8 எப்.எம் உதவியால் இந்த ஆவணப் படம் சிறப்பாக படைக்கப்பட்டிருக்கிறது.